Thursday, May 14, 2009

பெரிய புள்ள......!

எல்லாமே முடிஞ்சி போயாச்சி
நானா!
கெணத்தடியில் தேப்ப குட்டியும்
புல்லு வெலக்கி பெத்தாவும் பிடிச்சமே...
பேரக்கா| வித்த காசில கிரிடொபி
சாப்பிட்டமே...!
போற வார பஸ்ஸ_க்கெல்லாம்
~கெட்டம்பொல்| அடிச்சி மாட்டியது...
அமரய்யா கடயில கெழங்கெடுத்து
அடுத்த தோட்டத்துல விறகொடித்து
கட வச்சி வெளயான்டது....
லொக்கெட் மரத்து உச்சியிலேறி
கன்டக்டர் ட்ரைவரா கற்பன பண்ணி
கீழ வுழுந்து காலுடஞ்சது....
வாகனம் கொளுத்தும் திட்டம்
உம்மாகிட்ட மாட்டினது..
அந்தி வரை ~போக்| ல ஒழிஞ்சி
இருட்டினதும் பயந்து செத்தது...
பள்ளிக்கு ஓதப்போயி
அஸருக்கு அஸரத் போனதும்
சொல்லாம கொள்ளாம ஓடி வந்தது.
உங்கட தமுழ் ஹோம்வேர்க் ஐ நானும்
ஏன்டதை நீங்களும் திருத்தமா செஞ்சி
வெரிகுட் எடுத்தது......
யாருமில்லா நேரம் பாத்து
மாவு சீனி களவாண்டி திண்டது....
அரிசி போட்டும் புறா சிக்காததால்;
அழுது பெரட்டியது...
சிரட்டை அடுக்கி...விக்கட் வச்சி.
ஜுட் ராஜா சமிந்த எல்லோருமா
நடு ரோட்டில க்ரிக்கட் அடிச்சது!
ஹ்ம்ம்..
எல்லாமே முடிஞ்சி போயாச்சி
நானா!
கொழும்புல நீங்க வேலன்னு
பெருமயா பேசிக்கிறாங்க....
நான் தான் ஊட்டுக்குள்ளேயே
வெந்தழியிறேன்!
ஏன் என்டால்....
நான் தான் வயசுக்கு வந்துட்டேனாமே?!!!

1 comment:

M.Rishan Shareef said...

அருமையான கவிதை. இயல்பான மொழிநடை மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டுகிறது. மிகவும் ரசித்தேன். பாராட்டுக்கள் !