Monday, May 4, 2009

பொதி சுமக்கும் நினைவுகள்

உன் காரசாரமான
வார்த்தைகளை
அசை போட்ட படியே
பலமிழந்து விட்டிருக்கும்
இதயத்துக்கு
என்ன மருந்து தந்து
உற்சாகப் படுத்துவாய்?

ஊடலை
யார் மேற்கொண்டாலும்;;;;...
தேடிப் போக வேண்டியது
எழுதப் படாத
எனக்கான சட்டம்!

சொல் பேச்சை கேட்குமாறு
ஷெல் வீச்சை வீசுவது...
அவமானப் படுமென்னால்-நீ
வெகுமானம் காண்பதற்கா?

மறவாதே!
கூந்தல் கட்டி நீ ஆடிய இடமோ
இதயமென்ற
;ஊஞ்சல்!

சதி செய்து எனை மறந்தாலும்....
பொதி சுமப்பேன் உன் நினைவுகளை
என் நெஞ்சில்!

No comments: