Thursday, May 14, 2009

இயற்கைக்குள் தொலைந்தபின்...

ஐயோ!
நான் படும் வேதனையை அந்த
சூரியன் பட்டிருந்தால்
பட்டப்பகலிலே இருளுக்குள்
மறைந்திருக்கும்!
என் சோகம் சொல்லிட்டால்
நட்சத்திரங்களும்
குறைந்திருக்கும்!
கவலைகளுக்கு என்நிலை
தெரிந்தால் பாவம் என்று
விலகியிருக்கும்!
பிரச்சினைகளுக்கும் புரிந்தால்
ஓசைப்படாமல்
ஒதுங்கியிருக்கும்!
என்னை வதைப்பதைக் கண்டு
நம்பிக்கைக்கே தன் மீது
நம்பிக்கையின்றி போயிருக்கும்!
எதிர்காலம் பற்றிய என்
பயத்தைக் கண்டால்
பயம் கூட உடனே ஒளிந்திருக்கும்!
கண்களில் ஊறும்
கண்ணீர்கூட வருத்தத்துடன்
வற்றியிருக்கும்!
மனசிற்கு விளங்கிருந்தால்
மங்கிப் போய்
மரத்து விட்டிருக்கும்!
உள்ளம் கொஞ்சம்
அறிந்திருந்தால்
உடனேயே எழும்பாதபடிக்கே
உறங்கியிருக்கும்!
இதயமாவது புரிந்திட்டால்
துடிப்பையாவது
நிறுத்திக் கொள்ளட்டும்!!

No comments: