Monday, May 4, 2009

விஷ வித்தை

காசுக்கு பொருட்கள்
விற்கப் படலாம்
இதயமுமா?

காதலுக்காக எதையும்
இழக்கலாம்
காதலியையுமா?

வஞ்சிப்பதற்காகத் தான்
நெஞ்சுக்குள்
குடி புகுந்தாயா?;

எத்தனை முறை
என் காதலை
விளங்க வைப்பேன்
நானும்?

எத்தனை முறை
தன்மானம் விட்டு
பேசுவேன் இனிமேலும்?

~கத்தியில் நடப்பது போல
பேச வேண்டும்|
என்றதெல்லாம்
இதயம்
காயப் படக் கூடாதென்று
தானே?

சாகத் துடிக்கும் உயிருக்கு
விஷம் தடவி
காப்பாற்றும் வித்தையை
எங்கு கற்றாய் நீ?

அடுப்புக்குள் விழுந்த
ஓர் விறகாக என்
உயிருடல் தகிப்பது
உனக்கெங்கே தெரியும்????

No comments: