Sunday, August 17, 2008

இதயத்தின் முகவரிகள்

உன் அன்பெபனும் ஆலையிலே
நித்தமும் சாரு பிழியப்படும் கரும்பல்லவா
நான்
அப்படியே காதலுடன் எனை
ருசி பார்த்து மகிழும் எறும்பல்லவா நீ.

உனக்காக போருக்கு செல்ல
வேண்டும் என்றால் கூட வலித்திருக்காது
உனை விட்ட ஊருக்க செல்வதை
நினைத்தால் இதயம் சல்லடையாகிறது.

எப்படியிருப்பேன்??
என் கண்ணீர் துடைக்க உன்
கைகள் அங்கில்லை….
எனக்கு முத்தத்துடன் தலை தடவ
யார் இருக்கிறார்?
நான் வலி கண்டாலும் பொருட்படுத்த
நீயிருக்க மாட்டாயே?

சாப்பிடாத தருணங்களில் அன்பு
இழையோடும் உன் கடுமையை
யாரிடம் எதிர்பார்ப்பேன் ம்ம்??
உன் மார்ச்சூட்டை பெறுவதெப்படி?
ஏன் இடுக்கைகளும் இரவிலெல்லாம்
உனை அணைக்க ஏங்கிடாதா?
அப்போது நீயிருக்க வில்லை எனில்
எந்நிலை எப்டியிருக்குமோ?


நிமிடந்தோறும் உன் திருமுகம்
இதயக் கண்ணாடியில் வந்தாடுமோ…
அத்தருணங்களில் தனிமை என்னை
பிடித்து பந்தாடுமோ?
என் இதயத்தின் முகவரிக்குள்..
உனை பற்றின வரிகள்தானே
சதாவும் எதிரொலிக்கம் உயிரே.
-----------------------------------------------------------------
தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா

மனங்கவர் மணவாளன்

கலங்காதே காரிகையே
காதலுடன் உனைக் காப்பாற்ற
காளை ஒருவன் வராமலா
போய் விடுவான்?

யாருக்க யார் என்று வல்லவன்
என்றோ எழுதி விட்டான் அன்று?

தூய காதலின் நிமித்தம் நீ
தூக்கி எறிந்தவற்றை பற்றி
கவலைப் படாதே.

வீண் கற்பனைகளிலிருந்து மீண்டு வா….
உன் இதயத்தையும் உன்னையும்
உயிருக்குயிராய் நேசிக்க ஒருவன்
வருவான்.

பத்தினியே, நீ பாசத்துடன்
பழகியவனோ உன்னை அடைய
கொடுப்பனமில்லாதவன்...
சீதனத்தாகம் பிடித்த அவன்
சுயரூபத்தை மாங்கல்யத்தின்
முன்னெறிந்த நீ அதி;டக்காரி.

கண்ணகியே, உன் உள்ளம்
கவர வருவான் ஒரு அற்புதமானவன்
உன்னிடம் காதல் பாடம் பயில
வரப்போகும் அவன் உன் ஆசை மாணவன்.

உத்தமி நீ இன்ற வரையிலும்
உண்மையுடனிருப்பதால்
உலகமே வியக்குமளவு உனை
காத்திட வருவான் ஒருவன்
ஆம்
மிக மிக சீக்கிரமே வந்து
உன்னை தனதாக்கிக்கொள்வான்
உன் தலைவன்..
-----------------------------------------------------------------
தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா

கருகிப்போன மனசாட்சி

எதிர்பார்ப்புக்கள் எல்லாம்
எமாற்றத்தில் நிறைவுறும்போது
எதிலும் நாட்டமில்லாமல்
வேலை நிறுத்தம் செய்கிறது இதயம்.

அன்பு வார்த்தைகளுக்கும்
ஆசை முத்தங்களுக்கும் மனதில்
உற்சாகம் கொண்டுதானே
ஓடி வந்தேன்…உனை தேடி
வந்தேன்.

நாடுகளுக்கிடையிலான சில பேச்சுவார்த்தை
ஒப்பந்தங்கள் போன்றே
தவிடு பொடியாகி விட்டன என்
கனவுகளும்… பயணம் முழுவதிலும்
நான் உனைபற்றி மட்டுமே ஏந்தி
வந்த நினைவுகளும்.

பிறரை சந்தோஷப்படுத்த நீ
நினைக்கலாம்….எனினும்
உன் மீது எனக்க சந்தேகம் துளிர்க்கிறதே?

சுடு காடொன்றிலே….
வேந்து தகிக்கம் பிரதேசங்கள்
போன்றே கருகித்தான் போய்விடுகிறது
சில நேரம்
என் மனசாட்சியம்.
-----------------------------------------------------------------
தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா

எனை ஆளும் என் தேவதைக்கு

யுகங்களாய் வருத்தும்
ஓவ்வொரு நிமிடமும்
ஊன் அன்பினை தவிர
ஞபகங்கள் ஏதமில்லை.

வேலைத்தளத்திலும் போராட்டங்கள்
ஆயிரம் தான் -எனினும்
இதயத்தின் அடித்தளத்தில் நீயமர்ந்து
எனை உற்சாகப்படுத்துகிறாய்.

கூண்டிலிருந்து விடுபட்ட கிளியாய்
உனை காண மாலை வேளை
ஓடி வருகிறேன்...
காலைகளில் மட்டும் சிறகுடைந்த
குருவியாய் வாடி விடுகிறேன்.

எனை ஏற்றவளே
எனக்கு ஏற்றவளே
பருவத்தவிப்பில் பரிதவித்த எனக்கு
பக்குவமாய் விளக்கினாய்
பழி சொல்லும் உலகம் பற்றி.

தடுமாற்றம் கண்ட என் இதயத்துக்கு
தடம் மாறிடாதபடி
அறிவுரை தந்தாய்.

என் வாழ்க்கை பயணத்தை
விபத்தில் வீழ்த்திடாமல் சரியாக
வழி நடத்தக்கூடிய சாரதி நீதானம்மா.

ஏன் மேல் காட்டும் எஉன்
புனித நேசத்திற்கு..
ஏன் ஆயுள் முழுக்க நான்
உனக்கு மட்டும் சொந்தமடி
சகியே.
-----------------------------------------------------------------
தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா

எனக்கு பிடித்த உன் நேசம்

காதலுக்கு தடையாயிருக்கும்
கடிகாரம் மீது
கடும் கோபம் எனக்கு.

இரவெல்லாம் கதைபேசி
அதிகாலையிலும் தழுவுவாயே
அந்த சுகத்தில் தேநீர்
கூட தேவையிராது எனக்கு.

பசி மறந்து அலுவலாயிருக்கும்
சமயம் பார்த்து ஊட்டி விடும்
என் நேசம் ரொம்பவும் பிடிக்கும்.

குளித்து முடித்தபின்
துலை துவட்டி விடும் உன் சேலை ..
அது என் உயிரின் கவசம்.

என் துணிகளும் துவைத்த
வாய்க்கு ருசியாய் சமைத்து
என் வருகைக்காய் காத்திருப்பாயே...

அந்த எதிர்பார்ப்பில் கவலையையும்
இன்பத்தையும் ஒன்றாகவே அனுபவித்திருக்கிறேன்.

என் கண்ணீரையும் துடைத்துவிடும்
உன் கைகளுக்க முத்தத்தால்
வளையல் செய்து போட வேண்டும்

ஆறாத என் இதய ரணங்களையும்
ஒரே புண்ணகையில் தடவிவிடும் போது
தழும்புகளின் தடங்கள் கூட
மறைந்து போகும் தெரியுமா?

உடலாலும்
மனதாலும் நான் சந்தோஷிக்க
வேண்டுமென்ற உன்
சதா ப்ரார்த்தனையால் தான்
நான் இன்னமும் வாழ்கிறேனோ என்னவோ???
-------------------------------------------------------------------------------
தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா