யுகங்களாய் வருத்தும்
ஓவ்வொரு நிமிடமும்
ஊன் அன்பினை தவிர
ஞபகங்கள் ஏதமில்லை.
வேலைத்தளத்திலும் போராட்டங்கள்
ஆயிரம் தான் -எனினும்
இதயத்தின் அடித்தளத்தில் நீயமர்ந்து
எனை உற்சாகப்படுத்துகிறாய்.
கூண்டிலிருந்து விடுபட்ட கிளியாய்
உனை காண மாலை வேளை
ஓடி வருகிறேன்...
காலைகளில் மட்டும் சிறகுடைந்த
குருவியாய் வாடி விடுகிறேன்.
எனை ஏற்றவளே
எனக்கு ஏற்றவளே
பருவத்தவிப்பில் பரிதவித்த எனக்கு
பக்குவமாய் விளக்கினாய்
பழி சொல்லும் உலகம் பற்றி.
தடுமாற்றம் கண்ட என் இதயத்துக்கு
தடம் மாறிடாதபடி
அறிவுரை தந்தாய்.
என் வாழ்க்கை பயணத்தை
விபத்தில் வீழ்த்திடாமல் சரியாக
வழி நடத்தக்கூடிய சாரதி நீதானம்மா.
ஏன் மேல் காட்டும் எஉன்
புனித நேசத்திற்கு..
ஏன் ஆயுள் முழுக்க நான்
உனக்கு மட்டும் சொந்தமடி
சகியே.
-----------------------------------------------------------------
தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா
No comments:
Post a Comment