Sunday, August 17, 2008

எனக்கு பிடித்த உன் நேசம்

காதலுக்கு தடையாயிருக்கும்
கடிகாரம் மீது
கடும் கோபம் எனக்கு.

இரவெல்லாம் கதைபேசி
அதிகாலையிலும் தழுவுவாயே
அந்த சுகத்தில் தேநீர்
கூட தேவையிராது எனக்கு.

பசி மறந்து அலுவலாயிருக்கும்
சமயம் பார்த்து ஊட்டி விடும்
என் நேசம் ரொம்பவும் பிடிக்கும்.

குளித்து முடித்தபின்
துலை துவட்டி விடும் உன் சேலை ..
அது என் உயிரின் கவசம்.

என் துணிகளும் துவைத்த
வாய்க்கு ருசியாய் சமைத்து
என் வருகைக்காய் காத்திருப்பாயே...

அந்த எதிர்பார்ப்பில் கவலையையும்
இன்பத்தையும் ஒன்றாகவே அனுபவித்திருக்கிறேன்.

என் கண்ணீரையும் துடைத்துவிடும்
உன் கைகளுக்க முத்தத்தால்
வளையல் செய்து போட வேண்டும்

ஆறாத என் இதய ரணங்களையும்
ஒரே புண்ணகையில் தடவிவிடும் போது
தழும்புகளின் தடங்கள் கூட
மறைந்து போகும் தெரியுமா?

உடலாலும்
மனதாலும் நான் சந்தோஷிக்க
வேண்டுமென்ற உன்
சதா ப்ரார்த்தனையால் தான்
நான் இன்னமும் வாழ்கிறேனோ என்னவோ???
-------------------------------------------------------------------------------
தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா

No comments: