Sunday, August 17, 2008

கருகிப்போன மனசாட்சி

எதிர்பார்ப்புக்கள் எல்லாம்
எமாற்றத்தில் நிறைவுறும்போது
எதிலும் நாட்டமில்லாமல்
வேலை நிறுத்தம் செய்கிறது இதயம்.

அன்பு வார்த்தைகளுக்கும்
ஆசை முத்தங்களுக்கும் மனதில்
உற்சாகம் கொண்டுதானே
ஓடி வந்தேன்…உனை தேடி
வந்தேன்.

நாடுகளுக்கிடையிலான சில பேச்சுவார்த்தை
ஒப்பந்தங்கள் போன்றே
தவிடு பொடியாகி விட்டன என்
கனவுகளும்… பயணம் முழுவதிலும்
நான் உனைபற்றி மட்டுமே ஏந்தி
வந்த நினைவுகளும்.

பிறரை சந்தோஷப்படுத்த நீ
நினைக்கலாம்….எனினும்
உன் மீது எனக்க சந்தேகம் துளிர்க்கிறதே?

சுடு காடொன்றிலே….
வேந்து தகிக்கம் பிரதேசங்கள்
போன்றே கருகித்தான் போய்விடுகிறது
சில நேரம்
என் மனசாட்சியம்.
-----------------------------------------------------------------
தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா

No comments: