Sunday, August 17, 2008

மனங்கவர் மணவாளன்

கலங்காதே காரிகையே
காதலுடன் உனைக் காப்பாற்ற
காளை ஒருவன் வராமலா
போய் விடுவான்?

யாருக்க யார் என்று வல்லவன்
என்றோ எழுதி விட்டான் அன்று?

தூய காதலின் நிமித்தம் நீ
தூக்கி எறிந்தவற்றை பற்றி
கவலைப் படாதே.

வீண் கற்பனைகளிலிருந்து மீண்டு வா….
உன் இதயத்தையும் உன்னையும்
உயிருக்குயிராய் நேசிக்க ஒருவன்
வருவான்.

பத்தினியே, நீ பாசத்துடன்
பழகியவனோ உன்னை அடைய
கொடுப்பனமில்லாதவன்...
சீதனத்தாகம் பிடித்த அவன்
சுயரூபத்தை மாங்கல்யத்தின்
முன்னெறிந்த நீ அதி;டக்காரி.

கண்ணகியே, உன் உள்ளம்
கவர வருவான் ஒரு அற்புதமானவன்
உன்னிடம் காதல் பாடம் பயில
வரப்போகும் அவன் உன் ஆசை மாணவன்.

உத்தமி நீ இன்ற வரையிலும்
உண்மையுடனிருப்பதால்
உலகமே வியக்குமளவு உனை
காத்திட வருவான் ஒருவன்
ஆம்
மிக மிக சீக்கிரமே வந்து
உன்னை தனதாக்கிக்கொள்வான்
உன் தலைவன்..
-----------------------------------------------------------------
தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா

No comments: