Sunday, August 17, 2008

இதயத்தின் முகவரிகள்

உன் அன்பெபனும் ஆலையிலே
நித்தமும் சாரு பிழியப்படும் கரும்பல்லவா
நான்
அப்படியே காதலுடன் எனை
ருசி பார்த்து மகிழும் எறும்பல்லவா நீ.

உனக்காக போருக்கு செல்ல
வேண்டும் என்றால் கூட வலித்திருக்காது
உனை விட்ட ஊருக்க செல்வதை
நினைத்தால் இதயம் சல்லடையாகிறது.

எப்படியிருப்பேன்??
என் கண்ணீர் துடைக்க உன்
கைகள் அங்கில்லை….
எனக்கு முத்தத்துடன் தலை தடவ
யார் இருக்கிறார்?
நான் வலி கண்டாலும் பொருட்படுத்த
நீயிருக்க மாட்டாயே?

சாப்பிடாத தருணங்களில் அன்பு
இழையோடும் உன் கடுமையை
யாரிடம் எதிர்பார்ப்பேன் ம்ம்??
உன் மார்ச்சூட்டை பெறுவதெப்படி?
ஏன் இடுக்கைகளும் இரவிலெல்லாம்
உனை அணைக்க ஏங்கிடாதா?
அப்போது நீயிருக்க வில்லை எனில்
எந்நிலை எப்டியிருக்குமோ?


நிமிடந்தோறும் உன் திருமுகம்
இதயக் கண்ணாடியில் வந்தாடுமோ…
அத்தருணங்களில் தனிமை என்னை
பிடித்து பந்தாடுமோ?
என் இதயத்தின் முகவரிக்குள்..
உனை பற்றின வரிகள்தானே
சதாவும் எதிரொலிக்கம் உயிரே.
-----------------------------------------------------------------
தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா

No comments: