Tuesday, September 23, 2008

ஊசலில் ஓர் உயிர்

புலம்பெயர்ந்துவிட்டன இறந்தகால நினைவுகள்
ஓநாய்களின் குதர்க்கங்களினால்
மிரண்டிருக்கிறது அந்தகார நினைவுகள்
கண்திறந்தும் நினைத்ததை கூறிடாமல்
தவிர்க்கும் பிணவுடல் போன்றே
என் முடிவும் ஆகிடுமோ என்ற பிதியில்
சாகிறது ஆத்மா
சிற்சில நேரங்களில் மாத்திரம்
எனை ரௌத்திரமாய்
தரிசிக்கும் இரத்தம் வெளியேறிய பழங்கால நினைவுகள்
எதிர்காலத்தையும் கரடு முரடாய்க்காட்டி
சீவனை நடுங்கச் செய்கிறது…

பேய் பிசாசுகளின் ஊர்வலங்களில்
புலவந்தமாய் நானும் எடுத்தச்செல்ல
படுக்கையில் எனையறுத்துப்பலியிட
கூரிய பற்கள்
அங்கே பயமுறுத்தியபடி
கொடிய இராஜாளியின் கால்களுக்கிடையில்
சிக்கிய ஒரு புறாக்குஞ்சு போல
என் உணர்வுகளுடன் உணர்ச்சிகளும்
மண்டியிட்டு புதைந்தபடிக்கு
மெதுமெதுவாக கசிந்து போகிறது உயிரின் துளிகள்.
--------------------------------------------------------------
தியத்தாலாவ எச்.எப்.ரிஸ்னா

உடன்பாடுகள்

நான்….
உன்னுடையவளாகப்போகும்
நளை எண்ணியெண்ணியே இதயம் பலமிழந்து
விட்டதாய் ஓர் உணர்வு.

வருடங்கள் காத்திருக்க தெரிந்த
எனக்கு..நாளிகைகளை சமாளிப்பதுதான்
காயங்கள் தோறும் உப்பால்
கழுவது போலிருக்கிறது.

அரிதாக முதலில் நான்
கொண்டிருந்த கற்பனைகள் யாவுமே
பேரிதாக எனை தன்னுலகுக்குள்
அழைத்தச் செல்கிறே.

சொல்வாக்கு தவறாத
உன் குணம் கண்டதாலோ என்னவோ
செல்வாக்கை குறைவின்றி
பெற்றுவிட்டாய் என்னிடத்தில்..
கற்கண்டை சாப்பிட்டாற்போல காதல்
சொற்கொண்டு நீ போகையிலே..
ஆனந்த அருவியின் அலை வந்து
மோதுகிறது உள்ளத்தில்
முரண்பாடுகளின் தடயங்கள்
ஆழிந்துபோன அன்பொன்றில்
கட்டுப்பட்டிடத் தான்
என் உயிருக்குள்
உடன் பாடுகள் அதிகமாக…
--------------------------------------------------------------
தியத்தாலாவ எச்.எப்.ரிஸ்னா

Monday, September 22, 2008

இதயமும் பழஞ்செருப்பும்!

வாழ்க்கை மீதான ஆவல்
கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழந்து போகிறது..

யாரையும் பிடிக்கவில்லை
ஏமாந்தே மாய்ந்து போகும்
என்னையும் எனக்குப்
பிடிக்கவேயில்லை!

சேற்றில் முளைத்த செந்தாமரைக்கு
உள்ள மதிப்பு.......
சாலையோரப் பூக்களுக்கு இல்லை தானே?

வெறுமையாய் இருக்கும் போது கூட
இப்படி இதயத்தில் வெம்மை
பரவியதில்லை..!
அனுபவங்கள் ஆயிரம!;

என்றாலும்....
திருந்தாத என் இதயத்தை தான்
தேய்ந்த பழஞ் செருப்பால்
நாலு சாத்து சாத்த வேண்டும்!!!!
---------------------------------------------------------
தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா

பூமி திண்ணும் பூதம் பற்றி...

சில பெருத்த தலைகளின்
மலட்டு ஆவல்களினால்
என் எதிர்காலமெனும் குழந்தை இன்னும் ஜனனிக்கவேயில்லை!

காலுடைந்த கிழட்டுப் புலியின் ஏக்கம்
போலவே இன்னும் அடைய முடியவில்லை
என் இலக்குப் பட்சியை!

சருகாய் போன சானத்துக்கிருக்கும்
மதிப்பு கூட துளியும் இன்றி
என் வானம் இருட்டாகத் தான் எப்போதும்!

சதாவும் ஆழ்மனசிலே எரிமலையின்
குமுறல்கள்...
பூகம்பம் ஓய்வெடுத்துக் கொண்டு
என் மூளையை சுற்ற விட்டு
வேடிக்கை பார்ப்பதாய் ஓர் பிரமை....

தேர்தல் கால அரசியல் வாதியாய்
தோன்றி மறையும் சில சந்தோஷங்கள்!

உலகமே எனக்கெதிராய்
சதி செய்து விட்டு......
பலியை விதிமேல் இட்ட உணர்வொன்று!

என் பூமியை இப்போதெல்லாம்......
ஓர் பூதம் விழுங்கிய படியே!
எனினும்......
எதிலோ ஆர்வம் கொண்டு
என் ஆன்மா இன்;னும் வாழ்வதற்கு
பூஜித்துக் கொண்டே..!!!
--------------------------------------------------
தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா