Tuesday, September 23, 2008

உடன்பாடுகள்

நான்….
உன்னுடையவளாகப்போகும்
நளை எண்ணியெண்ணியே இதயம் பலமிழந்து
விட்டதாய் ஓர் உணர்வு.

வருடங்கள் காத்திருக்க தெரிந்த
எனக்கு..நாளிகைகளை சமாளிப்பதுதான்
காயங்கள் தோறும் உப்பால்
கழுவது போலிருக்கிறது.

அரிதாக முதலில் நான்
கொண்டிருந்த கற்பனைகள் யாவுமே
பேரிதாக எனை தன்னுலகுக்குள்
அழைத்தச் செல்கிறே.

சொல்வாக்கு தவறாத
உன் குணம் கண்டதாலோ என்னவோ
செல்வாக்கை குறைவின்றி
பெற்றுவிட்டாய் என்னிடத்தில்..
கற்கண்டை சாப்பிட்டாற்போல காதல்
சொற்கொண்டு நீ போகையிலே..
ஆனந்த அருவியின் அலை வந்து
மோதுகிறது உள்ளத்தில்
முரண்பாடுகளின் தடயங்கள்
ஆழிந்துபோன அன்பொன்றில்
கட்டுப்பட்டிடத் தான்
என் உயிருக்குள்
உடன் பாடுகள் அதிகமாக…
--------------------------------------------------------------
தியத்தாலாவ எச்.எப்.ரிஸ்னா

No comments: