Tuesday, September 23, 2008

ஊசலில் ஓர் உயிர்

புலம்பெயர்ந்துவிட்டன இறந்தகால நினைவுகள்
ஓநாய்களின் குதர்க்கங்களினால்
மிரண்டிருக்கிறது அந்தகார நினைவுகள்
கண்திறந்தும் நினைத்ததை கூறிடாமல்
தவிர்க்கும் பிணவுடல் போன்றே
என் முடிவும் ஆகிடுமோ என்ற பிதியில்
சாகிறது ஆத்மா
சிற்சில நேரங்களில் மாத்திரம்
எனை ரௌத்திரமாய்
தரிசிக்கும் இரத்தம் வெளியேறிய பழங்கால நினைவுகள்
எதிர்காலத்தையும் கரடு முரடாய்க்காட்டி
சீவனை நடுங்கச் செய்கிறது…

பேய் பிசாசுகளின் ஊர்வலங்களில்
புலவந்தமாய் நானும் எடுத்தச்செல்ல
படுக்கையில் எனையறுத்துப்பலியிட
கூரிய பற்கள்
அங்கே பயமுறுத்தியபடி
கொடிய இராஜாளியின் கால்களுக்கிடையில்
சிக்கிய ஒரு புறாக்குஞ்சு போல
என் உணர்வுகளுடன் உணர்ச்சிகளும்
மண்டியிட்டு புதைந்தபடிக்கு
மெதுமெதுவாக கசிந்து போகிறது உயிரின் துளிகள்.
--------------------------------------------------------------
தியத்தாலாவ எச்.எப்.ரிஸ்னா

No comments: