Friday, October 10, 2008

மண்டை ஓடும் இரத்தக்கசிவும்!

உன் இதயத்தை
பூங்கா என்றல்லவா எண்ணியிருந்தேன்
முற்றும் முழுதாக
கள்ளிச்செடி இருப்பதுபற்றி தெரியாமல்....

என் மண்டையோட்டு
இரத்தக்கசிவுகளிலும்
உன்னால் மறக்கப்பட்ட நிகழ்வுகளிலும்
நிறைந்து வழிகின்றன
நான் கண்ட ஏமாற்றங்கள்!

என் அன்பென்ற
புண்ணிய ஸ்தலத்தை
எச்சம் செய்து போன காகம் நீ !

பொய் மட்டுமே பூசப்பட்டிருந்த
காட்சி சித்திரத்தின்
முழு உரிமையும் உனக்குத்தான்!

என் மௌன இரட்சிப்புகளால்த்தான்
நான் இன்னும் உயிர் வாழ்வதாய்
காதோரம் சொல்லிப் போயிற்று
பெருங்குரலெடுத்து ஆந்தை ஒன்று!

No comments: