Friday, October 24, 2008

யாரை குற்றம் சொல்வதோ?

முதன் முதலாய் என்னில் துளிர்த்திட்ட
நேசத்தை....மறைமுகமாய் உதிர்த்திட்டேன்
நெஞ்சில் வைத்து பாசத்தை!!

உன் முகம் ரசித்து க
ழுத்தில் முகம் புதைத்து
மார்பு முடி அளைந்து...
கவலைகள் கலைந்து
அன்புப் பார்வையில் கரைந்து போகத்தானே எண்ணியிருந்தேன் உள்ளுக்குள்????

யாரோ ஒருத்தி உனை எண்ணியே வாழ்வதாய்
பிதற்றுகிறாய் நீ !!!;

வாழ்கிறாள் தானே?

ஆனால்........ ஆனால் நான்
எல்லோருமிருந்தும் யாருமற்றவளாய்
உனை எண்ணியே அனுதினமும்
செத்துப் போகிறேனே.?

இந்த ஜீவமரணப் போராட்டம்
நீ உணர நியாயமில்லை தான்!!!

தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா

No comments: