Friday, October 24, 2008

புதைகுழி நோக்கிய புறப்படல் ஒன்று!

சற்று தாமதப்படுங்கள்
எனை மணவரைக்கு அழைத்துச் செல்ல
உத்தேசமா?
கொஞ்சமே கொஞ்சம் என்
மன அறையை உற்று நோக்குங்கள்!

கடந்து போன என் காதலின்
கால் தடங்கள் புரிகிறதா?
உதிரம் போல என் உடலெங்கும் ஊடுறுவி விட்ட
உணர்வுகள் தெரிகிறதா?

அவன் ஸ்வாசத்தால் வாசம் தடவி வைத்திருக்கிறேன்
அதை விஷம் என்றா நச்சரிக்கிறீர்கள்?

என் கழுத்தோடு கை கோர்த்து சிரிக்கிறானே
இந்த மாலை கட்டாயம் தேவை தானா?
கரங்களை பற்றி இழுக்கும் போது..
வளையல்களுக்கு இங்கென்ன வேலை?

கூரைச்சீலை!!!!

அவன் நினைவுகளை முழுசாய்
போர்த்தியிருக்கும் போது
இது அவசியமில்லை அகற்றுங்கள!;

உதடு கன்னம் கண் என அழுகையால்
சிவந்திருக்க..
உதட்டுச் சாயம் மட்டும் எதற்கு?

ம்;ம்….இப்போது அழைத்துச் செல்லுங்கள்
அந்த ம(ர)ண அறைக்கு!!



தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா

No comments: