Thursday, May 14, 2009

நட்டுவக்காலிகளின் ராச்சியம ;!

நட்பு எனும் நாடகத்தில்
நட்டுவக்காலிகளின் ராச்சியம்..
புனிதமிகு உறவாம்!
புழுவை வி;டவும் ஒன்றமில்லா
கேவலமான பூச்சியம்!
பதவி பணம் இருந்திட்டால்
பழகிடும் ~கண்ணே| என்று..
குறை அதில் கொஞ்சம் வந்தால்
குறி வைக்கும் பின்னே நின்று!
மனதுக்கு தர வேண்டுமல்லவா
ஆறுதல்...நடப்பதிங்கே அன்புக்கும்
வஞ்சம் செய்திடும் மாறுதல்!
இதயத்துள் தீ மூட்டி எரிக்கும்...பின்
இருப்பவரை கோள் மூட்டி பிரிக்கும்!
அறிவில்லா தலைகள் பகரும்
பால் போன்ற உறவிது என்று..
அநுபவ உள்ளங்கள் அறியும்
பாலல்ல கள் இது என்று!
துன்பங்களை கொட்டி விட்டால்
பலர் முன்னால் வெட்டி விடும!;
கவலை போக்க இந்த களங்கம் எதற்கு?
இருக்கிறதே இருட்டும் தனிமையும்
துணையாய் அதற்கு!!!!

No comments: