Thursday, May 14, 2009

பற்றி எரிகிறதே நம் பலஸ்தீனம் !

இராட்சசிப்பெண்னே!
நான் மட்டுமா?
நீயென்றெண்ணி
நான் அணைத்துத்துயிலும் தலையணை கூட
என் கண்ணீரை அதிகம் பருகியதால்
கண்ணதாசனாய் போனது!
என்னை விட்டு பிரிந்து செல்ல
தெரிந்த உனக்கேன்
கொஞ்சமாவது புரிந்து கொள்ள முடிவதில்லை
உன்னை ஏந்தியுள்ள என் இதயம்
படும் பாட்டை?
சிந்திக்காமல் நீயும் நானும்
சந்தித்து முத்தித்துக் கொண்ட
நிலவுப் பொழுதுகளின்.....
நினைவுப் பொழுதுகளை......
இப்போதேனும் மீட்டிப்பார்
பற்றி எரிகிறதே நம் பலஸ்தீனம் போல.....!!!!

1 comment:

Unknown said...

Rizna
I read your peoms,its very nice.
Vasanth from france