Thursday, February 26, 2009

எனக்கு பிடித்த உன் நேசம் !





காதலுக்கு தடையாயிருக்கும்
கடிகாரம் மீது
கடும் கோபம் எனக்கு!

இரவெல்லாம் கதை பேசி
அதிகாலையிலும் தழுவுவாயே...
இந்த சுகத்தில் தேநீர் கூட
தேவையிராது!

பசி மறந்து
அலுவலாய்
இருக்கும் போதெல்லாம்
ஊட்டி விடும் உன் நேசம்
ரொம்பவும் பிடிக்கும் எனக்கு!

குளித்து முடிந்ததும்
தலை துவட்டும் உன்; முந்தானை...
அது என் உயிரின் கவசம்!

துணிகளும் துவைத்து
எனக்கென சமைத்து..
உன் வருகைக்காய் காத்திருப்பாயே..
அந்த எதிர்பார்ப்பில்
கவலையையும் இன்பத்தையும்
ஒன்றாகவே அனுபவித்திருக்கிறேன்!

என் கண்ணீரையும் துடைத்துப் N;பாடும்
உன் கைகளுக்கு...
முத்தத்தால் வளையல் செய்து போட
ஆசை!

ஆறாத என் இதய ரணங்களையும்
ஒரே புன்னகையில் தடவும் போது..
தழும்புகளின தடயங்களும்
மறைந்து போகும் தெரியுமா?;

உடலாலும்
மனசாலும்
நான் சந்தோஷிப்பதற்காக
நீ செய்யும் சதா ப்ரார்த்தனையால் தான்
இன்னமும் நான்
உயிர் வாழ்கிறேனோ என்னவோ???

No comments: