Thursday, February 26, 2009

இருட்டில் தடுமாறும் ஒளியொன்று…..!

காலைக் கடித்த நாய் கூட
சில நேரம் வாலாட்டலாம்...

புல் தின்னாத புலியும்
பூனையை தன் மடியிலிட்டு
தாலாட்டலாம்!

பழமும் அமுதும் கொடுத்து
வளர்த்தாலும்..
மேனி மினுங்க புரண்டு
நெளிந்தாலும்...
கொத்துவதை தவிர
வேறொன்றும் தெரியாது
பாம்புக்கு!

மனிதன் என்ற பெயரில்
பேயாடும் ஒரு இடத்தில்
வாழ்க்கைப் பட்டிருக்கிறேன்!
பிறருக்காக சிரித்திருக்கும்
நான்;;;.....

உண்மையில் அழுவதற்கு கூட
மறுக்கப் பட்டிருக்கும்
காதல் கைதி!

என்னை மட்டும் தேர்ந்தெடுத்து
விளையாடிப் பார்க்கிறது
விதி!
பல இதயங்களிலிருந்தும்
தூக்கி எறியப் பட்டு
விழுந்தடிபட்டு
துடித்த போதெல்லாம்.....

என் தலை தடவிய
தனிமையே,பேனையே,இருட்டே
இப்போது
நீங்களெல்லாம் எங்கே
போய் தொலைந்தீர்கள்?

ஆறுதல் வேண்டி அலைகிற
என்னை மன்னித்து நீங்களாவது
ஏற்றுக் கொள்ளுங்களேன்!!!

No comments: